தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் சந்தித்து இருதரப்பு பிரச்சினைகள் தொடர்பில் அவர் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.