‘தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்கவை மதிக்கிறேன். அவர் எனக்கு எதிரியல்ல’ என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன், மக்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அநுரகுமார திஸநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியுடன் சிவில் சமூக உடன்படிக்கைக்கு வரத்தயார். இதற்காக ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற குழு ஒன்று தன்னுடன் இணையவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அநுரகுமார திஸநாயக்கவின் அரசியல் மேடைக்கு அருகில் எந்த நேரத்திலும் நடமாட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.