தேயிலை செய்கைக்கு தேவையான 15 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்,
நேற்றைய தினம் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,
நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற 44 ஆயிரம் மெட்ரிக் தொன் உரத்தில் 60 வீதமான உரம் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
அரசாங்கத்திற்குச் சொந்தமான இரு உர நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.