தேர்தலை கூட்டணியாக சந்திக்க தயாராகிறது சுதந்திர கட்சி -மஹிந்த அமரவீர கருத்து!

0
59

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவர் கட்சியை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு வந்திருக்காவிடின் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை
நிறுத்தியிருப்போம் எனவும் எதிர்வரும் தேர்தலை கூட்டணியாகவே சந்திப்போம் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வீழ்ச்சிப் பாதையில் இருந்து மீண்டு வருகிறது.
எமது அரசியல் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துவருகின்றோம் – மாவட்ட ரீதியில் மாபெரும் மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றோம்.


அண்மையில் அம்பாந்தோட்டை பகுதியில் மக்கள் சந்திப்பை நடத்தியிருந்தோம்.
அம்பாறை, பதுளை, புத்தளம், குருநாகல் மாவட்டங்களில் விரைவில் மக்கள் சந்திப்புகளை நடத்துவோம்.


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவர் கட்சியை வீழ்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றிருக்காவிடின் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருக்க முடியும்.


எதிர்வரும் தேர்தலில் எவருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக இதுவரை தீர்மானிக்கவில்லை.


கட்சி ரீதியாகவே தீர்மானம் மேற்கொள்வோம் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.