தேர்தல்கள் ஆணைக் குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கான விண்ணப்பம் அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத் தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டம் தொடர்பாக தாம் உள்ளிட்ட தற்போதைய ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட பல சட்டமூலங்களை நிறைவேற்றும் நடவடிக்கைக்காக இந்த விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்கு மீண்டும் விண்ணப்பிக்குமாறு பல சிவில் அமைப்புகள் தன்னைக் கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.