இந்திய குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் ஆழ்ந்த காற்றழுத்தம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்தம் புயலாக வலுப்பெறுமா? இல்லையா என்பது தொடர்பில் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிடவில்லை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அரபிக்கடலில் கலக்கும் என்றும் நாளைக் கடற்கரையை விட்டு நகரும் வேளை சற்று வலுவடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.