ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான விசேட சுற்றுநிருபத்தை எதிர்காலத்தில் வெளியிடவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேவையான அறிவுறுத்தல்கள் குறித்த விசேட சுற்றுநிருபத்தில் அடங்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி, அந்த விசேட சுற்றுநிருபம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அது வர்த்தமானி ஊடாக வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.