தொடரூந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து: தாய், தந்தை, மகள், மருமகள் உயிரிழப்பு!

0
339

வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரே விபத்தில் உயிரிழந்தனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் காலி பகுதியை சேர்ந்தவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.
காலி – பூஸா வெல்லப்பட பகுதி ரயில் கடவையூடாக கடந்த முச்சக்கர வண்டியை ரயில் மோதி விபத்துக்குள்ளானது.