களனி கங்கைக்கு அருகாமையில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தினால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள வௌ்ள நிலமை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெஹிஓவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்போ, ஹோமாகம, கடுவலை, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தள ஆகிய பகுதிகளில் இவ்வாறு வௌ்ள நிலமை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அப்பகுதியில் வசிக்கு மக்கள் மற்றும் அப்பகுதிகள் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.