29 C
Colombo
Friday, October 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிரான வழக்கு நவம்பர் மாதம் 4ஆம் திகதி அழைப்பதற்கு திகதியீடு

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நவம்பர் மாதம் 4ஆம் திகதி அழைப்பதற்கு உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
இந்த மனு நேற்று உயர் நீதிமன்ற நீதியரசர் அர்ஜூன ஒபேசேகர முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மனு தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின் இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு நீதியரசர் உத்தரவிட்டார்.
அதற்கும் ஆட்சேபனைகள் இருப்பின் நவம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் அதனை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles