நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பலாக்காய், ஈரப்பலா, வற்றாளைக் கிழங்கு உணவு!

0
288

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பலாக்காய், ஈரப்பலா, வற்றாளைக் கிழங்கு
என்பவற்றை வழங்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது.
பாதுகாப்பான வனப் பிரதேசங்களில் அதிகமாக காணப்படும் பலாக்காய் போன்றவற்றை பறிப்பதற்காக, குறித்த வனங்களுக்குள் நுழைவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை அமைச்சர் மஹிந்த அமரவீர
அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.
அந்த யோசனையை பாராட்டிய ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பலாக்காய் உள்ளிட்டவைகளை உணவாக வழங்குவது
தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.