நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வீட்டிற்கு சேதம் விளைவித்த சந்தேக நபர்களை அடையாளம் காண நடவடிக்கை!

0
133

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வீடு மற்றும் காரியாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர்களை அடையாளம் காண உதவுமாறு, பொலிஸார், பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற, அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளின் போது, வீடு மற்றும் காரியாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் தீ மூட்டியமை தொடர்பில், சந்தேக நபர்களை அடையாளம் காண, பொலிஸார், பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணையின் போது கிடைக்கப் பெற்ற காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு, சந்தேக நபர்களின், குறிப்பிட்ட அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, பொது மக்கள், பொலிஸாருடன் தொடர்பு கொள்ள முடியும். அந்தவகையில், 032 – 226 52 22 என்ற இலக்கத்தின் ஊடாக புத்தளம் பொலிஸ் தலைமையகத்;திற்கும், 071 – 859 12 92 என்ற இலக்கத்தின் ஊடாக, புத்தளம் பொலிஸ் தலைமையக பொலிஸ் அதிகாரியுடனும், மக்கள் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.