நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!

0
178

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளன.
இன்று அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோல் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 470 ரூபாவாக உயர்ந்துள்ளது.
ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதன் புதிய விலை 550 ரூபாவாக உயர்ந்துள்ளது.
ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 460 ரூபா ஆகும்.
ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் புதிய விலை 520 ரூபா உயர்ந்துள்ளது.