நாட்டில் HIV நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஒரு வருடத்திற்குள் 620 புதிய நோயாளிகள் மற்றும் 81 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடும் இதற்கு பிரதான காரணம் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு பதிவான ஒட்டுமொத்த தொற்றுக்களுடன் ஒப்பிடும்போது, இந்த வருட முதல் காலாண்டில் 13 சதவீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
எச்ஐவி தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 4,556 இலிருந்து 5,176 ஆக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், 165 புதிய நோயாளிகள் மற்றும் 15 இறப்புகள் பதிவாகியுள்ளன.
எனினும் 2022 ஆம் ஆண்டுவரை மொத்தம் 1,520 எச்ஐவி தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன.