நாட்டுக்கு திரும்பும் கோட்டாவின் வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படவேண்டும்: ஜேவிபி

0
220

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியவுடன் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் மீண்டும் விசாரணை செய்யப்படவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாட்டை விட்டுச்சென்ற கோட்டாபய ராஜபக்ச, இலங்கையின் குடிமகன் என்ற அடிப்படையில், நாட்டுக்கு திரும்பி வர உரிமையுள்ளது.
எனினும் அவர் ஜனாதிபதி பதவி காலத்தில் அனுபவித்த வந்த தண்டனையின்மை வாய்ப்பை பயன்படுத்த முடியாது.
அவருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமைதியான போராட்டக்காரர்களை அடக்கி வேட்டையாடும் கோழைத்தனமான நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஹேரத் கோரியுள்ளார்.
மக்கள் எதிர்கொள்ளும் எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் மருந்துப் பற்றாக்குறையைத் தீர்ப்பதன் மூலம் மட்டுமே போராட்டத்தை நிறுத்த முடியும்.
அடக்குமுறை அல்லது மிரட்டல் மூலம் இதை ஒருபோதும் நிறுத்த முடியாது. அது அரசியல் நெருக்கடியை மோசமாக்கும். அரசியல் நெருக்கடி மோசமடைந்தால், பொளாதார நெருக்கடிக்கான தீர்வுகளும் தாமதமாகும் என்று விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.