நாட்டுக்கு 9,500 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி!

0
46

கடந்த 4 ஆம் திகதியிலிருந்து இன்று (17) மதியம் 12 மணி வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு 9இ500 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.இலங்கை சுங்கத்தின் பேச்சாளர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் 3,300 மெற்றிக் டன் பச்சை அரிசியும், 6,020 மெற்றிக் டன் நாட்டு அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.நாட்டுக்கு அனுமதிப் பத்திரமின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 20ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.