புதிய அரசாங்கமொன்றை அமைத்து நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எமது முதல் இலக்கு என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்துரைத்துள்ள அவர்,
அரசாங்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்காததன் காரணமாகவே நாடு தற்போது மிக தீவிரமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
அரசாங்கத்தால் முறையாக எரிபொருளை கொண்டுவர முடியாமல் போனது. நுகர்வோருக்கு பால்மாவை தடையின்றி விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.