நாட்டை ஒருவரால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் என்ற கருத்து போலியானதாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
எதிர்க்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச நாட்டை பொறுப்பேற்று முன்னொக்கி கொண்டு செல்ல தாயராகவுள்ளார். இந்த நாட்டை ஒருவரால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் என எவரேகும் கூறுவார்கள் ஆயின் அது போலியான விடயமாகும். அது வெறுமனே கனவாகும்.
அதேபோன்று தற்போதைய முறைமையை விட்டு விலகி சென்றால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் சிலர் கூறுகின்றனர். அதேபோன்று இந்த முறைமையின் ஊடாக பயணிக்கவில்லையாயின் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல வே;ணடும் எனவும் கூறுகின்றனர். ஆனால் இந்த கதைகளை கேட்கும் வகையிலான முட்டாள்கள் இந்த நாட்டில் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
நாட்டை வீழ்ச்சிப்பாதைக்கு இட்டுச்செலும் வகையிலான முட்டாள்கள் மொட்டுக்கட்சியிலேயே உள்ளனர். மாறாக ஏனைய கட்சிகளில் இல்லை. அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியினுள்ளும் இல்லை. எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் திறமை வாய்தவர்களாவர்.