நாட்டை மீளவும் முற்றாக முடக்குவது என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பண்டிகைக் காலத்தில் நாட்டை முழுமையாக முடக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சர்வதேச ரீதியில் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கான முதலீட்டு மற்றும் வர்த்தக நடவக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறானதொரு நிலையில் நாட்டை மீண்டும் முடக்குவது நடைமுறைக்குச் சாத்தியமற்றதாக காணப்படுகிறது.
ஆகவே, பொதுமக்கள் இந்தப் பண்டிகைக் காலப்பகுதியில் உரிய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பாதுகாப்பாகச் செயல்பட வேண்டியது கட்டாயமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.