நாட்டை வந்தடைந்த TSP உர கப்பல்

0
362

TSP உரத்தை ஏற்றிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பலில் 36000 மெட்ரிக் தொன் உரம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சேற்று உரம் எனப்படும் TSP உரத்தை மற்றுமொரு கப்பலும் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் USAID நிறுவனத்தின் உதவியின் கீழ், குறித்த TSP உரம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த உரத் தொகையை நாட்டிலுள்ள 12 இலட்சம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, ஒரு ஹெக்டேயருக்கு 55 கிலோகிராம் TSP உரம் விநியோகிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் குறித்த உரத் தொகையை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு கூறியுள்ளது.