
நடமாடும் சேவை ஊடாக நான்காவது கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இந்த சேவையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார். இதைத்தவிர நான்காவது டோஸ் தடுப்பூசி, சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவமனைகளில் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.