நாளை ஜனாதிபதியாக பதவியேற்பாரா? அநுர குமார திஸாநாயக்க

0
80

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்தால் நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் எளிமையான வகையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்ற போதிலும் அதிக வாக்குகளைப் பெற்றவராக வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார் அநுர. நாட்டின் அடுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என்பது தெளிவாகியுள்ளது.

அதாவது பாரியளவிலான வாக்கு வித்தியாசத்தில் தமது கட்சி வெற்றியீட்டியுள்ளதாகவும் இரண்டாவது இடத்தைப் பெறும் வேட்பாளரினால் அநுரவின் வாக்கு எண்ணிக்கையை பெற முடியாது என அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தேர்தல் முடிவுகள் விரைவாக கிடைக்கப்பெறுமானால், இன்று மாலையே அநுர ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என கூறியுள்ளார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அவருக்கு பல அரசியல் வாதிகள் இன்று காலை முதல் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.