நாளை (29) நள்ளிரவு முதல் நாடு தழுவிய 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் இயந்திர ஓட்டுநர் சங்கம் தெரிவித்துள்ளது.
தவறான சமிக்ஞை அமைப்புகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இந்த அடையாள வேலைநிறுத்தம் தொடங்கப்படும் என்று தொழிற்சங்கத் தலைவர் கே.ஏ.யு. கொண்டசிங்க தெரிவித்தார்.
இந்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்களும் நிறுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.