நாளை முதல் மீண்டும் அதிக நேரம் மின் வெட்டு!

0
228

எதிர்வரும் நாட்களில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, நாளைய தினம் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியாலங்களும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாகவுள்ளது.
அதேபோல், 19 மற்றும் 20ஆம் திகதிகளிலும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 4 மணித்தியாலங்களும் 50 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, குறித்த தினங்களில் ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.