மட்டக்களப்பு நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியாலய சிறுவர்களின் இல்ல விளையாட்டு போட்டி அதிபர் வி. பிரபாகரன் தலைமையில் இன்று பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மடக்களப்பு நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியாலயத்தில் நடைபெற்ற சிறுவர்களின் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் சிறார்களின் வினோத விளையாட்டு நிகழ்சிகளும், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன்போது விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறார்கள் , பழைய மாணவர்கள் பெற்றோர்களுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.மட்டக்களப்பு நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியாலயத்தில் நடைபெற்ற சிறார்களின் விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதி திட்ட மிட்டல் பணிப்பாளர் ஏ .சுதர்சன் , மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக ஆரம்பப்பிரிவு உதவி கல்வித் பணிப்பாளர் உ . விவேகானந்தம் , கொக்குவில் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ கே யு பி .விமலரத்ன, நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய தலைவர் ரூ .ஜெய்ஷோபராஜ் , உட்பட அயல் பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,பாடசாலை சிறார்கள் ,சிறார்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர் .