நிதி மோசடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது

0
101
குறைந்த விலையில் முட்டையை பெற்றுத்தருவதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.முட்டைகள் அடங்கிய 10 பெட்டிகள் தம்வசம் உள்ளதாகவும் அதனை 50,000 ரூபாவுக்கு விற்பனை செய்வதாகவும் கூறி அவர் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.இந்தநிலையில், முட்டைகளை பெற்றுக்கொள்ள காத்திருக்குமாறு தெரிவித்து அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.