இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி போட்டி நாளை அதிகாலை 03. 30 மணியளவில் தொடங்கவுள்ளது.
இந்தப் போட்டிக்கான ஆடும் அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. அந்த அணியில் ஒரே ஒரு மாற்றமாக கடந்த போட்டியில் விளையாடிய கிறிஸ் வோக்சுக்கு பதிலாக மேத்யூ பாட்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜாக் கிராலி, பென் டக்கெட், ஜேக்கம் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் (தலைவர்), கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், பிரைடன் கார்ஸ் மற்றும் ஷோயப் பஷீர் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.