நிரோஷா விராஜினியின் வீட்டிற்குள் நுழைய முயன்ற நபர் விளக்கமறியலில்

0
105
மாலபே பகுதியில் உள்ள பிரபல பாடகி நிரோஷா விராஜினியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.சந்தேகநபர் மாலபே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 35 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் இதற்கு முன் பலமுறை பாடகியின் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளார். இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய நீண்ட விசாரணைகளை மேற்கொண்ட மாலபே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளார்.