நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களினால் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
காலை 8 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பதவி உயர்வில் நிலவும் தாமதம் மற்றும் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்னிறுத்தி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.