நிறை புத்தரிசி பூஜைக்காக நாளை சபரிமலை நடைதிறப்பு

0
456

சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நிறைபுத்தரிசி பூஜை நடைபெறவுள்ளது.
தேவசம்போர்டுக்கு சொந்தமான செட்டிக்குளங்கரை வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை வைத்து சபரிமலையில் வழிபடுவதே நிறைபுத்தரிசி பூஜையாகும். இந்த பூஜையானது, நாளை மறுதினம் அதிகாலை 5.40 மணிக்கு நடைபெறவுள்ளது,
கருவறைக்குள் வைத்து வழிபாடு நடத்தப்படும் நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.