தொடர் மழை காரணமாக, நில்வளா கங்கையை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழையுடனான வானிலை காரணமாக நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்கொட, கொட்டபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மலிம்பட, திஹகொட, கம்புறுப்பிட்டிய, மாத்தறை, மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.