நீதி வேண்டி செம்மணியில் ஆர்ப்பாட்டம்!

0
3

செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு நீதி வேண்டி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் செம்மணி சந்தியில்  கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டமொன்று  வியாழக்கிழமை (05) முன்னெடுக்கப்பட்டது.  

ஆர்ப்பாட்டக்காரர்கள்  பதாகைகளை தாங்கி  கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.