28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நீர் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படுமா ?

மின்சார கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.நீர் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக இதுவரை எந்த கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை என அதன் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இலங்கை மின்சார சபையின் செலவு முகாமைத்துவத்திற்கு அமைய, மின்சாரக் கட்டண திருத்தம் அவசியம் என்ற அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையிலும் மின்சார சபையின் கோரிக்கைக்கு அமையவும் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles