நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று எரிபொருள் வழங்கப்பட மாட்டாது: உரிமையாளர் சிவராசா மக்களிடம் தெரிவிப்பு

0
244

ஞாயிறு திங்கள் எரிபொருளுக்காக காத்திருக்க வேண்டாம் செவ்வாய் புதன் கிழமையே எரிபொருள் வழங்கப்படும் சாவகச்சேரி நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் கடந்த 6 நாட்களாக கிராம சேவகர் பிரிவுகளின் அடிப்படையில் எரிபொருள் மக்களுக்கு விநியோகிக்க பட்டுவந்தது.
இந்நிலையில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் மக்களை வரிசையில் நின்று உங்கள் பொன்னான நேரத்தினை வீண் விரயம் செய்ய வேண்டாம் எனவும் வைத்திலிங்கம் சிவராசா தெரிவித்தார்.
அத்துடன் வருகின்ற செவ்வாய் புதன் கிழமைகளில் கீழ் காணப்படும் கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வருகின்ற செவ்வாய்க்கிழமை

J-315
J-316
J-317
J-318
J-319
J-320
J-321
J-322
J/278
J/280
கிராமசேவையாளர் பிரிவிற்கும்
நாளை செவ்வாய்க்கிழமை குறித்த கிராம சேவகர் பிரிவுகளுக்கே நுணாவில் IOC எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படும்.நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள் அந்தவகையில் அனைத்து மக்களுக்கும் எரிபொருள் கிடைக்கும் வண்ணம் புதிய எரிபொருள் அட்டை நடைமுறையின்படி பின்வரும் நடைமுறையின் கீழ் மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படுமென நுணாவில் IOC எரிபொருள் நிரப்ப நிலைய உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா தெரிவிப்பு.
கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டை உள்ளவர்களுக்கு நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை கீழ் காணப்படும் கிராம சேவகர் பிரிவுகளுக்கு பெட்ரோல் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நாளைய தினம் செவ்வாய்க்கிழமை
J/278_ 09.00 am to 09.30 am.
J/280 _ 09.30 am to 10.00 am
J/315 10.00 am to 10 45 am J/316 10.45 am to 11.30 am.
J/317 _ 11.30 am to 12.15 pm
J/318 _ 01.00 pm to 01.45 pm
J/319 _ 01.45 pm to 02.30 pm
J/320 _ 02.30 pm to 03.15 pm
J/3 21 _ 03.15 pm to 03.45 pm
J/322 _ 03.45 pm to 04.15 pm

கிராமசேவையாளர் பிரிவிற்கும்

வருகின்ற புதன்கிழமை

J-323
J-324
J-325
J-326
J-327
J-328
J-329
J-330

கிராமசேவையாளர் பிரிவிற்கும்
எரிபொருள் வழங்கப்படுமென தெரிவித்தார்.
அத்துடன் மேல் காணப்படும் கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட இடங்களில் வசிக்கும் மக்கள் எரிபொருள் அட்டை பெற்றுக் கொள்ளாது இருந்தால் உங்கள் கிராமசேவகரை தொடர்புகொண்டு எரிபொருள் அட்டையினை பெற்றுக்கொள்ளுங்கள் எனவும்.
ஏற்கெனவே மேல் காணப்படும் கிராமசேவகர் பிரிவில் எரிபொருள் அட்டையினை பெற்று எரிபொருளினை பெற்றுக்கொண்டவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது எனவும் தெரிவித்தார்.
மேலும் ஏனைய கிராமசேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களுக்கு அடுத்து வரும் கிழமை நாட்களில் படிப்படியாக எரிபொருட்கள் வழங்கப்படுமென தெரிவித்ததுடன.
கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டையை கொண்டுவருபவர்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படுமெனவும் அட்டை கொண்டு வராதவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது எனவும் தெரிவித்தார்.