நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது தொகுதியில் 2 மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக மின்வெட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்றும் நாளையும் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்கள் மட்டுமே மின்வெட்டு அமுலாகும் என நேற்றைய தினம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்தது.
எனினும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் செயலிழப்பு மின்வெட்டு நேர மாற்றத்தில்
தாக்கம் செலுத்தியுள்ளது.