எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட கருத்தாடல்களைத் தொடர்ந்து இறுதி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.