29 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நுவரெலியாவில், கழிவகற்றும் பௌசர் மோதியதில் இருவர் காயம்!

நுவரெலியா மாநகர சபையின் கழிவகற்றும் பௌசர் மோதிய நிலையில், இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 10.30 மணியளவில், நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில், உடப்புஸல்லாவ வீதியில், பாதசாரி கடவையில் பயணித்த இருவர் மீது, கழிவகற்றும் பௌசர் மோதியது.

அதனையடுத்து, விபத்தில் காயமடைந்த இருவரும், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வாகனம், வேககட்டுபாட்டை இழந்து பயணித்ததாக, நுவரெலியா பொலிசாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பாதசாரிகள் இருவரை மோதுவதற்கு முன், குறித்த கழிவகற்றும் வாகனம், ஆவா-ஹெலிய நோக்கி பயணித்த கார் ஒன்றையும் மோதியுள்ளது.

இதனையடுத்து, நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான கழிவகற்றும் வாகன சாரதி, நுவரெலியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles