நுவரெலியா மாவட்டத்திற்குப் பொறுப்பான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் வீரசிங்க சுசில் பிரியங்கர டி சில்வா இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட ரொஷான் விஜேசிங்க இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் அந்த வெற்றிடத்திற்கு பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக கடமையாற்றிய வீரசிங்க சுசில் பிரியங்கர டி சில்வா, சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள் மற்றும் பொலிஸார் பங்கேற்றனர்.