உள்ளூர் விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஸ்திரமான பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சினால், வவுனியா மாவட்டத்திற்கு 9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்டு தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு சிறுதானியம் வழங்கி வைக்கப்பட்டது. பயறு, உழுந்து ஆகிய தானியங்கள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானால் நேற்று நெடுங்கேணி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.பார்த்தீபன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திர, நெடுங்கேணி பிரதேச செயளாலர் இ.பிரதாபன், நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினகள் பலர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு சிறுதானியம் வழங்கி வைத்தனர்.