நாடு இன்று எதிர்கொண்டு இருக்கும் நெருக்கடிமிக்க சூழலில் சினிமா துறை மட்டுமன்றி அதனுடன் தொடர்புடைய ஏனைய துறைகளும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் தேசிய மக்கள் சபை உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதன் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடு இன்று எதிர்கொண்டு இருக்கும் நெருக்கடிமிக்க சூழலில் சினிமா துறை மட்டுமன்றி அதனுடன் தொடர்புடைய ஏனைய துறைகளும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.
சினிமா துறை மட்டுமல்ல சினிமா துறையுடன் சார்ந்த பல்வேறு துறைகளை கைவிடும் நிலைமைக்கு கலைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தொலைக்காட்சி தொடர்களை இயக்குவதிலும் சவால்கள் உள்ளன.
எனவே சகல துறைகளையும் உள்ளடக்கும் வகையில் எமது கொள்கைகளை உருவாக்குவதே எமது இலக்காக உள்ளது.
தேசிய மக்கள் சபை என்ற ஒன்றை அதற்காகவே நாம் உருவாக்கியுள்ளோம். சகல துறைகளையும் சேர்ந்தவர்களை இந்த சபைக்குள் உள்வாங்குவதே எமது பிரதான நோக்கம்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ கலைஞர்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர்.
அவரை போன்றதொரு அரசியல் தலைவரை இதுவரை நாம் பார்க்கவில்லை.
எதிர்காலத்தில் ஏனைய துறைகளை சேர்ந்தவர்களையும் எவ்வாறு உள்வாங்குவது என்பது குறித்த கலந்துரையாடலில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்.