நெவில் சில்வா நீதிமன்றத்தில் சரண்!

0
2

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளரும், உதவி காவல்துறை அத்தியட்சகருமான (ASP) நெவில் சில்வா, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

வெலிகமயில் 2023 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கிற்காக இவர் சரணடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். உதவி காவல்துறை அத்தியட்சகர் நெவில் சில்வா இந்த வழக்கின் 9 ஆவது சந்தேக நபர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.