நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை

0
210

நாட்டில் நேற்றைய தினத்தில் (31) மாத்திரம் 84,565 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 72,887 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 739,499 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 1,521 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இதுவரை 347,310 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு போடப்பட்டுள்ளது.

இதேவேளை, 26,821 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.