பங்களாதேஷில் பிரதமர் மாளிகையை சூறையாடிய போராட்டக்காரர்கள்

0
82

பங்களாதேஷில் வெடித்த மாணவர் போராட்டத்தால் ஒரே நாளில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட சம்பவம் உலகநாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் போராட்டத்தால் நாட்டைவிட்டு வெளியேறிய பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மாளிகையை சூறையாடிய வன்முறைக் கும்பல் அவரது வீட்டில் இருந்த ஆடைகளை கூட அள்ளிச் சென்ற 2 புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் போராட்டக்காரர்ளில் சிலர் ஷேக் ஹசீனா வீட்டில் கொள்ளையடித்த சேலைகளை அங்கேயே அணிந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

மேலும் ஷேக் ஹசீனாவின் மாளிகையை போராட்டக்காரர்கள் என்ற பெயரில் வன்முறை கும்பல் முற்றுகையிட்டதால் உயிர் தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் டாக்காவில் ஷேக் ஹசீனாவின் மாளிகைக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஷேக் ஹசீனா மாளிகையில் இருந்த ஆடைகள் உட்பட பல பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றது.

அதேவேளை கடந்த காலங்களில் இலங்கையில்கோட்டாபய ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் நாட்டி ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மாபெரும் மக்கள் புரட்சி வெடித்த நிலையில் கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

இருந்தும் ஆத்திரம் தீராத தென்னிலங்கை மக்கள் ஜனாதிபதி மாளிக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை எடுத்துச்சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அப்போது உலகளவில் இலங்கைபோராட்டம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பங்களாதேஷின் போராட்டமும் உலகின் கவனத்தை உற்றுநோக்கவைத்துள்ளது.