‘பசுமையைக் காத்திடு’ எனும் தொனிப் பொருளில் மரநடுகைத் திட்டம்

0
143

அனைத்துலக தமிழர் மேம்பாட்டு நிதியம் முன்னெடுக்கும் ‘பசுமையை காத்திடு’ எனும் தொனிப் பொருளிலான மரநடுகைத் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து கீரிமலை நகுலேஸ்வரம் வரையிலான பாதையின் இரு மருங்குகளிலும் மரங்கள் நடுகை செய்யப்படவுள்ளன. இன்று மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு அண்மையில் முதற்கட்டமாக மர நடுகையை வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆரம்பித்து வைத்தார்.