படையினருக்கு காணிகள் சுவீகரிப்பை நிறுத்த தீர்மானம்!

0
78

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் காணி சுவீகரிப்பு தொடர்பிலும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கருத்து வெளியிட்டார்.

யாழ். மாவட்டத்தில் படையினருக்காக பொது மக்களின் காணிகளை சுவீகரிக்க தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் சுழிபுரத்தில் மக்களின் காணிகளை படையினருக்கு சுவீகரிக்கும் நோக்கில் நில அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட இருந்த சம்பவத்தையும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்துமாறு நில அளவைத் திணைக்களத்தினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்தார்.

இதனையடுத்து யாழ் மாவட்டத்தில் படைகளின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை நில அளவைத் திணைக்களம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அத் தீர்மானத்தை ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதெனவும் ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இத் தீர்மானத்தை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்மொழிய பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் வழிமொழிந்தார். இக் கூட்டத்தில் இராணுவத்தினர்.

பொலிஸார், அரச திணைக்கள அதிகாரிகள் அரசியல்வாதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.