சப்ரகமுவ மாகாண சபையில் ஆசிரியர் நியமனங்களை வழங்குவதாக கூறி, 23 பட்டதாரிகளிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில், ஒரு பாடசாலை ஆசிரியையும் அவரது கணவர் என்று கூறிக்கொள்ளும் ஒருவரையும் கைது செய்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகத்திற்குரிய ஆசிரியர் எஹெலியகொட புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் முப்பத்தெட்டு வயதுடைய பெண். சில காலத்திற்கு முன்பு ஒரு அரசியல்வாதியுடன் நெருக்கமாக இருந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர். அந்தக் காலகட்டத்தில், சப்ரகமுவ மாகாண சபையில் ஆசிரியர் நியமனங்களை வழங்குவதாகக் கூறி பட்டதாரிகளிடம் இரண்டு லட்சம், மூன்று லட்சம் ரூபாய் பெற்று வருவதாக போலிஸாருக்கு ஏராளமான புகார்கள் வந்ததாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.