பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள், சேவையில் இருந்து நீக்கப்பட்டதாக கருதி, உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2024/07/Sequence-10.00_05_56_23.Still050-1024x576.jpg)
மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளை, கோட்டாபய ராஜபக்ஷ பார்த்துக் கொண்டிருப்பார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதனை சகித்துக் கொள்ள மாட்டார்.
கடுமையான தீர்மானங்களை எடுக்காவிடின், இவர்களை கட்டுப்படுத்த முடியாது.
மக்களை பணயக் கைதிகளாக்கும் தொழிற்சங்கங்களுக்கு அடிப்பணிய முடியாது.
என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.