பதுளை மாவட்டம், வெலிமடை கல்வி வலயத்திற்குட்பட்ட வோர்விக் அம்பேவெல சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்திற்கு, ஆங்கில பாட ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி, இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் இணைந்து, இன்று காலை போராட்டத்தை முன்னெடுத்தனர்.

150 ற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையில், கடந்த மூன்று மாத காலமாக, ஆங்கில பாட ஆசிரியர் இல்லாமையால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனால், மாணவர்களின் நலன் கருதி, ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.