பனாகொடை இராணுவ முகாமின் பிட்டிபன பாதுகாப்பு தளத்திலிருந்து T-56 துப்பாக்கி மற்றும் 120 தோட்டாக்களை திருடியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் மற்றும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களால் திருடிச் செல்லப்பட்டதாக கூறப்படும் T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹோமாகம மாகம்மன பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்களை இன்று (16) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.