பன்னிப்பிட்டி, பொல்வத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றது.
தலவத்துகொடையிலிருந்து வந்த வாகனமொன்று பொல்கொடுவ வீதிக்குத் திரும்ப முற்பட்ட போது பன்னிப்பிட்டி பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றைய நபர் கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
யட்டியாந்தோட்டை, மல்லகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது கசுன் பண்டார மற்றும் மீகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது பிரபோத மதுஷான் என்ற இளைஞர்கள் இருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்தனர்.